Showing posts with label தமிழ்நாட்டில். Show all posts
Showing posts with label தமிழ்நாட்டில். Show all posts

Sunday, December 12, 2010

கருவறைக்குள் தடுக்கப்படும் அர்ச்சகர்கள் !

100_1087.JPGதமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கப்பட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பணி நியமனம் கோரி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
அடுத்தகட்டமாக ஆலய கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்யும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு 
சாதியைச் சார்ந்தவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சியளிக்கும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் ஆறு இடங்களில் அரசின் சார்பில் இருநூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
அர்ச்சகர்களுக்கே தூர தரிசனமா?
Image0084.jpgஆனால் இந்த திட்டத்தை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்ட இடைக்கால தடைகாரணமாக, இந்த திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு இதுவரை தமிழக அரசு பணி நியமனம் அளிக்கவில்லை.
பயிற்சி முடிந்து இரண்டு ஆண்டுகளான பின்னரும் தங்களுக்கு அர்ச்சகராக பணியளிக்கப்படாததை கண்டித்தும் தங்களுக்கு வேலை தரக்கோரியும் பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் வெள்ளிக் கிழமையன்று தமிழ்நாட்டின் 
கோவில்கள் சிலவற்றுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
archa.jpgஅர்ச்சகர்களுக்கே தூர தரிசனமா? இந்த போராட்டம் குறித்து தமிழோசைக்கு செவ்வியளித்த அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வ அரங்கநாதன், கோவில்களின் கருவறையில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை நீங்கினால்தான் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்பதால், அதை நீக்கும் வரை தங்களின் போராட்டம் நீடிக்கும் என்று தெரிவித்தார்.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழோசைக்கு செவ்வியளித்த தமிழ்நாட்டின் இந்து அறநிலையத் துறை ஆணையர் பி ஆர் சம்பத், உச்சநீதிமன்றத்தின் தடையாணை இருப்பதால் அவர்களை பணி நியமனம் செய்யமுடியவில்லை என்று கூறியதுடன், அந்த வழக்கின் தீர்ப்புக்கு பிறகே இதில் தமிழக அரசு தனது அடுத்த நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

(Source: http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100917_tnpriestsdemandentry.shtml)