Monday, July 15, 2013

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிடர் கழகம் போராட்டத்தில் திமுகவினரும் பங்கேற்பார்கள்

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிடர் கழகம் போராட்டத்தில் திமுகவினரும் பங்கேற்பார்கள்

1கருத்துகள்




சென்னை: 
அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்தும் போராட்டங்களில் திமுகவினர் பங்கேற்பார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் சாதிப் பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்டவனை தொழ வேண்டும்; அனைவருக்கும் அர்ச்சகராகும் உரிமை வேண்டுமென்று கோரி 1970ம் ஆண்டு ஜனவரி மாதம் பெரியார் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். 
நான் பெரியாருக்கு ஒரு வேண்டுகோள் அறிக்கை கொடுத்தேன். அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும்; போற்றக்கூடிய புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும்; அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள், எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக ஆகலாம். அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பது பற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. எனவே,  கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு  பெரியாரை கேட்டுக் கொண்டேன். உடனே போராட்டத்தைத் தள்ளி வைக்கச் சம்மதித்தார். 2-12-70ல் சட்டப் பேரவையில் அர்ச்சகர் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேறியது. அர்ச்சகர் சட்டம் கண்டு, சமத்துவம் விரும்பாத சனாதனிகள் வெகுண்டார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். 12 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 1972ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 


கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு. மனுதாரர்களால் தவறு என்று கூறப்படும் இந்தச் சட்டம் மத சம்பந்தமான நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிடவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொ ண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லுபடியானதே என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்த போதிலும், நடை முறையில் இனிமேல் செய்யக்கூடிய காரியம் என்ற வகையில் அந்தச் சட்டத்தின்படி காரியங்கள் நடை முறைக்கு வராத அளவுக்கு முடக்கப்பட்டது. அது நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். எத்தனையோ முறை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியும் மத்திய அமைச்சர்களிடத்தில் விவாதித்தும்கூட அந்த அரசியல் சட்டத் திருத்தப் பணி நடைபெறவே இல்லை. இது கண்டு கொதிப்ப டைந்த பெரியார் 1973ம் ஆண்டு டிசம்பர் 8, 9 ஆகிய நாட்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட் டில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவதற்குத் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், அந்தப் போராட்டத்தை நடத்தாமலேயே 1973ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி பெரியார் மறைந்து விட்டார். 
சென்னை அண்ணா மேம்பாலத்திற்கருகே 1977ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி பெரியார் சிலை திறப்பு விழா அதிமுக சார்பாக நடைபெற்ற போது திராவிடர் கழகத்தின் சார்பில் அந்த விழாவில் கலந்து கொண்ட மணியம்மையார் அந்நாளைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் பேசும் போது, அர்ச்சகர் சட்டம் முடமாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். 



1978ம் ஆண்டு நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு விழாவில் சென்னை கடற்கரையில் நான் பேசும் போது, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராமையும் அந்த மேடையில் வைத் துக் கொண்டு பேசும் போது,  பெரியார் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றிடும் வகையில் திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே 23-5-2006ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. அப்போது வேத விற்பன்னரும், தமிழ் அர்ச்சனைக்காக பல்லாண்டு காலம் போராடியவருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர், இப்போது தேர்ந்தெடுத்திருக்கிற கருணாநிதி மந்திரிசபை எல்லா சாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆகலாம் என முடிவெடுத்து அறிவித்திருப்பது வேதவாக்கு.   ஆகமத்தைச் சொல்லி மற்ற சாதிக்காரர்களை பிராமணர்கள் கோவிலுக்குள் விடாமல் இருந்தார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் பிராமணனுக்கும், ஆகமத்துக்குமே முரண்பாடுதான். பிராமணன் தனக்கு எதிரான ஆகமத்தின் பெயரைச் சொல்லியே மற்ற சாதிக்காரர்களை உள்ளே விட மறுத்து வந்தான்.  பிராமணர் இதையே, தன் தொழிலாக்கிக் கொண்டதால், மற்ற யாரையும் உள்ளே விடவில்லை. 



ராம சாமி நாயக்கர் அந்தக் காலத்தில் என்னிடம் தாத்தாச்சாரியாரே எங்க கையால ஒரு பூவை எடுத்து உங்க சாமிக்குப் போடக்கூடாதாய்யா? என்று கேட்டார். அந்தப் பூவை இப்போது கருணாநிதி எடுத்துப் போட வைத்திருக்கிறார். இது வரவேற்க வேண்டிய ஒரு சீர்திருத்த விஷயம். இதை யாராவது ஆட்சேபி த்தால் அவர்கள் மக்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள்னு அர்த்தம். அவர்களுக்கு நாம் தான் நல்ல புத்தி சொல்லித் திருத்த வேண்டும் என்று பதிலளித்தார் பெரியார்.  திமுக ஆட்சியின் அரசாணை அடுத்து பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 4  இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் சென்னை, திருவரங்கம் ஆகிய 2 இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி முடித்த நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் பிரச்னை உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. அதன் காரணமாக அவர்களுக்கு உடனடியாக திருக்கோவில்களில் வேலைவாய்ப்பு உருவாக்கிட இயலாமல் போயிற்று. அதற்குப் பின்னர் அதிமுக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றது. 



உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அர்ச்சகர் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர 6 மாத கால அவகாசத்தைக் கேட்டுப் பெற்றது. 6 மாத காலம் முடிந்த பிறகும், இந்தப் பிரச்னையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தோர், உச்சநீதிமன்றம் 6 மாத கால அவகாசம் வழங்கியும்கூட மாநில அரசு இதுவரை எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை. எனவே மாநில அரசின் நோக்கத்தை நாங்கள் சந்தேகிக்கிறோம். 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை தற்போதுள்ள தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று எங்களுக்கு தெரிய வில்லை. இந்த நிலையில்தான் திராவிடர் கழகம் இதை  வற்புறுத்தும் வகையில் ஆகஸ்ட் முதல் தேதி ஆர்ப்பாட்டம், மாநாடு, கருத்தரங்குகள் மற்றும்   3ம் கட்டமாக மறியல் போராட்டத்தை நடத்துவது என்று முடிவெடுத்துள்ளது. இந்த போராட்டங்களில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்று அந்தப் போராட்டத்திற்கு எழுச்சியூட்டும் வகை யில் தேவையான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.