Tuesday, March 26, 2013

ஸ்ரீரங்கம்: பார்ப்பனியத் தீண்டாமைக்கு இடைக்காலத் தடை!

இப்படி அதிமுக்கியமான அணுஆயுத பணிகளுக்குத்தான் ‘இந்து பிராமண அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும்’ என அறமே இல்லாத அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்திருந்தது.


மிழக அரசு சட்டமான ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்’ என்பதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணையில் உள்ள நிலையில், தமிழக அரசு இந்து அறநிலையத்துறை திருவரங்கம் கோவிலில் 4 விதமான பணி நியமனத்திற்கு இந்து பிராமணர் அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும் எனவும் 15-3-2013 அன்று விண்ணப்பிக்க இறுதி நாள் என பொறுப்பாகவும் விளம்பரம் கொடுத்திருந்தது.
படம் : பி.பி.சி.
படம் : பி.பி.சி.
அர்ச்சகர் உட்பட கோவில் பணியாளர் அனைவரையும் நியமிக்கும் அதிகாரம் அரசு அதிகாரத்திற்கு உட்பட்டது; முறைகேட்டில் ஈடுபடும் அர்ச்சகர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என பிற அரசு ஊழியர்களுக்கு உள்ள விதிமுறைகள் இவர்களுக்கும் உள்ளது; அரசு வேலைவாய்ப்பில் பிறப்பை வைத்து சாதிபாகுபாடு பார்க்கக் கூடாது; தீண்டாமை எந்த வடிவத்தில் அமுல்படுத்தினாலும் தண்டனைக்கு உரிய குற்றம் எனவும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது; வாரிசுரிமைப்படி அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இவை எல்லாம் ஏட்டளவில்தான் உள்ளன. சட்டப்படியே தீண்டாமை கடைப்பிடிக்கப் படுவதற்கு மீண்டும் ஒரு சாட்சிதான் திருவரங்கம் கோவில் விளம்பரம்.
பிப்ரவரி – 13 ஆம் தேதியிட்டு, சிறீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த, தகுதியான வர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு 15.03.2013 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு கீழே காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன, அதாவது
1. பதவி பெயர் – இளநிலை உதவியாளர்
ஊதிய விகிதம் – ரூ. 5,200 – 15,900+ தர ஊதியம் – ரூ. 2,400
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 3
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு மற்றும் கணினி – தட்டச்சுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண் – பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
2. பதவி பெயர் – பிரதான ஆலயக் காவலர்
ஊதிய விகிதம் – ரூ. 4,000 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 10
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
3. பதவி பெயர் – பிரதான ஆலய சிறீபாதம்
(சிலையைத் தூக்குகிறவர்)
ஊதிய விகிதம் – ரூ. 4,100 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 4
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பதவி பெயர் – உபகோயில் சிறீபாதம்
(சுற்றுப் பிரகார சிலையை தூக்குகிறவர்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 2
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பதவி பெயர் – உபகோயில் காவலர்
(சுற்றுப் பிரகார கோயில் காவலர்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 7
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
6. பதவி பெயர் – சன்னதி வாசல்
(சுற்றுப் பிரகார கோயிலின் அர்ச்சகர்)
ஊதிய விகிதம் – ரூ. 4,100 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 2
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
7. பதவி பெயர் – உபகோயில் பரிசாரகர்
(உதவி வேலைகள்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 1
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட ஏழு வகையான பணியிடங்களுக்கும் இணை ஆணையரிடம் – செயல் அலுவலர் எஸ்.கல்யாணி அவர்களின் பெயரிலும், இரா.சேஷாயி (தலைவர்) எஸ்.பி.ரங்காச்சாரி, கே.என்.சீனிவாசன், ஏ.டி.கஸ்தூரி, பராசர.ஆர். சிறீவெங்கட பட்டர் (சுழல் முறை அறங்காவலர்) ஆகிய அறங்காவல் குழுவினர் பெயரிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறநிலையத்துறை வெளியிட்ட விளம்பரங்களும் விண்ணப்ப படிவமும் (படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)
இப்படி அதிமுக்கியமான அணுஆயுத பணிக்குதான் இந்து பிராமண அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும் என அறமே இல்லாத அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்திருந்தது. பிற அரசுப் பணிகள் போல் கோவில் பணி நியமணங்களிலும் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டப்படியானது.கேள்விக்கு இடமில்லாமல் புனித போர்வையில் ஆலயத்தில் நடக்கும் அநீதிகள் அரசின் அரவணைப்பில் இது வரை அரங்கேற்றபட்டு வந்தன. இனி ஆதினங்களானாலும் ஆலயமானாலும் அதன் வரவு செலவுகள், ஊழியர்களின் பணி நியமணம் அனைத்திலும் பொது மக்கள் தலையிட வேண்டும். அவையும் நமது சொத்துக்கள்தான் என்பதை மக்கள் உணரவேண்டும்.
ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தின் விளம்பரத்திற்கு எதிராக அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்யபட்டது.
அவரது மனுவில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்து கோயில்களின் கருவறைக்குள் பிராமணர்கள் தவிர மற்ற ஜாதியினர் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக சிவாச்சாரியார்களுக்கான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்”, என்று தெரிவித்திருந்தார்.
“ஆனால் தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு வகையான பணியிடங்கள் எவையும் கோவிலின் கருவறைக்குள் செல்லும் பணிகள் அல்ல. கருவறைக்கு வெளியே செய்கிற பணிகளுக்குக்கூட பிராமண ஐயங்கார் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பொதுப் பணித்துறை, வருவாய்த் துறைபோல இந்து அறநிலையத் துறையும் தமிழக அரசின் மற்றும் ஒரு துறைதான். இந்த வேலைகளுக்கு இந்துக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லலாமே தவிர, இந்து ஐயங்கார்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. எனவே கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று ரெங்கநாதனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன், ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம்.பி.பி.சி. செய்தி

தொடர்புடைய பதிவுகள்


VINAVU

ஸ்ரீரங்கம்: ஐயங்கார்களை மட்டும் பணிக்கமர்த்த தடை


கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 மார்ச், 2013 - 19:09 ஜிஎம்டி
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் இந்து ஐயங்கார்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் செய்திருந்த அறிவிப்புக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் காலியாக இருக்கும் காவலாளி தொடங்கி உற்சவ மூர்த்தியை சுமந்து செல்லும் ஸ்ரீபாதம் வரையிலான ஏழு வகையான வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

ஆலயம் சார்பில் செய்யப்பட்ட இந்த அறிவிப்பு, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், அதை ரத்து செய்யக் கோரியும் “அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம்” சார்பில் அதன் தலைவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த அரங்கநாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதில், பிரதான ஆலய ஸ்ரீபாதம், உப கோயில் ஸ்ரீபாதம், சன்னதி வாசல், உப கோயில் பரிசாரகர் ஆகிய நான்கு வகையான பணிகளுக்கு இந்து பிராமண ஐயங்கார் ஜாதியைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவரது மனுவில், "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்து கோயில்களின் கருவறைக்குள் பிராமணர்கள் தவிர மற்ற ஜாதியினர் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக சிவாச்சாரியார்களுக்கான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்”, என்று தெரிவித்திருந்தார்.
“ஆனால் தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு வகையான பணியிடங்கள் எவையும் கோவிலின் கருவறைக்குள் செல்லும் பணிகள் அல்ல. கருவறைக்கு வெளியே செய்கிற பணிகளுக்குக்கூட பிராமண ஐயங்கார் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பொதுப் பணித்துறை, வருவாய்த் துறைபோல இந்து அறநிலையத் துறையும் தமிழக அரசின் மற்றும் ஒரு துறைதான். இந்த வேலைகளுக்கு இந்துக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லலாமே தவிர, இந்து ஐயங்கார்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. எனவே கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று ரெங்கநாதனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன், ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த அன்று, வழக்கறிஞர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையிலும், மனுவை படித்துப்பார்த்து அதில் இருக்கும் நியாயத்தை பார்த்த மாத்திரத்தில் கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார், அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம் சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.

Sunday, March 24, 2013

Can Agama Shastras override Constitution, lawyers wonder

Return to frontpage

MADURAI, March 16, 2013 

Can Agama Shastras override Constitution, lawyers wonder



Say, it is ridiculous to hear that a Dalit can become the President, but not a priest

ON EQUALITY:‘Lets put an end to untouchability inside sanctum sanctorums’ being released in Madurai on Thursday.— Photo: G. Moorthy 


The Constitution guaranteed social equality and equal opportunity for all irrespective of caste, creed and sex. But the Agama Shastras (Hindu treatise on temple management) seemed to override the Constitution and deny such equality in the matter of appointment of temple priests, lamented a group of lawyers practising in the Madras High Court Bench here.


The lawyers had gathered at the Madras High Court Madurai Bench Advocates Association (MAHAA) hall on Thursday for the release of a Tamil book, ‘Lets put an end to untouchability inside sanctum sanctorums.’ Advocate T. Lajapathi Roy released the book, published by the Human Rights Protection Centre (HRPC), and advocate G. Prabhu Rajadurai received the first copy.

Mr. Roy said that the very necessity of releasing such a book in the 21st century proved that caste system had not yet been abolished as declared by the Constitution in 1950. As in the past, temples continued to be the power centres, dominated by people belonging to a particular caste by birth, he added.

Questioning the origin of Agama Shastras and the importance being given to them even by the courts, he said, “A glimpse into the history will show that Aryans are none other than immigrants to India, a land that was once an attractive destination as the United States is today, and they converted the Buddhist and Jain shrines into Hindu temples, besides creating practices favourable to them.”

Lawyer B.S. Meltiue said that HRPC had chosen to release the book on March 14 as it was the same date in 1972 when a five-judge Bench of the Supreme Court had held that a Archaka (temple priest) must belong to a particular denomination because others may defile the image of the deity by their touch, as stated in the Agamas. S. Vanchinathan, Madurai district deputy secretary of HRPC, said that it was ridiculous to hear that a person belonging to a Scheduled Caste or the Backward Classes could assume office as the President of the country but not that of a priest.

M. Thirunavukarasu, president, Madurai Bench High Court Advocates Association (MBHAA), presided over the function.


http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/can-agama-shastras-override-constitution-lawyers-wonder/article4514791.ece

யார் இந்து? ஓடும் ரயிலில் பார்ப்பனர்களோடு சண்டை !

கருவறை தீண்டாமையை எதிர்த்த தோழர்களின் பிரச்சாரத்தின் போது பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.


அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 20ம் தேதி உச்சநீதி மன்றத்தில் நடக்கிறது.
இது பெரியாரின் நிறைவேறாத ஆசை. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பார்ப்பனர்கள் இதை சட்ட ரீதியாக தடுத்து வருகிறார்கள். பெரியார் பிறந்த மண் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழகத்திலிருந்து இதை எதிர்த்து எந்த அமைப்பும் வழக்காடவில்லை.
ஒரு பக்கம் தடைகோரி பார்ப்பனர்கள். இன்னொரு பக்கம் பார்ப்பனர்களை பகைத்துக்கொள்ளாமல் வாதிடும் தமிழக அரசு. எதிர்த்தரப்பாக புரட்சிகர அமைப்புகள். இந்த மூன்று பேரைத் தவிர இந்த வழக்கில் வேறு யாரும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. பார்ப்பனர்கள் தரப்பில் பணத்தை அள்ளி இறைக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள். பெரியார் படத்தையும் கோடிகளில் பணத்தையும் வைத்துக் கொண்டிருப்பவர்களோ அமைதியாக இருக்கிறார்கள் ! இந்நிலையில் ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வழக்கு நிதி திரட்டி வருகின்றனர்.
சென்னை மின்சார இரயிலில் ஒரு முழு நாள் செய்யப்பட்ட பிரச்சாரம் மற்றும் நிதிவசூல் அனுபவம் ஒன்றை வாசகர்களுக்காக இங்கு தருகிறோம்.
ஓடுகின்ற மின்சார இரயிலில் தோழர்கள் குழுக்களாக பிரிந்துகொண்டு ஒவ்வொரு பெட்டியாக ஏறி மக்களிடையே வழக்கைப் பற்றி விளக்கி கூறிய பிறகு நிதி கோருவார்கள். பிரச்சாரத்தின் போது மக்களிடையே பேசிய உரையின் சுருக்கம் இது தான்.
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தேர்தல் பாதை திருடர் பாதை! புரட்சி ஒன்றே மக்கள் விடுதலைப் பாதை! என்கிற முழக்கத்தோடு செயல்பட்டு வரும் புரட்சிகர நக்சல்பாரி அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்திலிருந்து வருகிறோம். வணக்கம்.
இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்கிறார்கள், சரி தான், ஆனால் ஒரு மதம் என்கிற வகையில் மதங்கள் பக்தனுக்கு வழங்கக்கூடிய அடிப்படையான வழிபாட்டு உரிமையை இந்து மதம் அனைத்து இந்துக்களுக்கும் வழங்கியிருக்கிறதா என்றால் இல்லை. பக்தன் தனது கடவுளை தொட்டு வணங்கி பூஜிக்கும் உரிமையை இந்து மதம் அனைவருக்கும் வழங்கவில்லை. நீங்கள் கோவில் வாசல்படி வரை தான் போக முடியும், அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, மீறி எடுத்து வைத்தால் அங்கு வன்முறை வெடிக்கும். இன்றுவரை ஆகம விதிகளின்படி அமைந்த கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்களைத் தவிர வேறு எந்த இந்துவும் நுழைய முடியாது. இது தான் இந்து மதம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இது தான் நிலைமை. இதை எதிர்த்து தான் தந்தை பெரியார் 1970-ல் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.
உடனே அன்றைக்கு இருந்த தி.மு.க அரசு அனைவரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. பார்ப்பனர்கள் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை வாங்கினார்கள். தமிழக அரசு அதற்கெதிராக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதன்பிறகு கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து 2006 இல் தி.மு.க அரசு அனைவரையும் அர்ச்சகராக்கும் அரசாணையை வெளியிட்டு, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி ஒன்றையும் துவங்கியது. அதில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்க்கான மாணவர்கள் படித்தார்கள். அவர்களில் 206 மாணவர்கள் முறையாக ஆகம விதிகளை கற்று, சமஸ்கிருத வேதங்கள், ஸ்லோகங்களை கற்று தீட்சையும் பெற்று கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருந்த தருணத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் பார்ப்பனர்கள் மறுபடியும் உச்சநீதி மன்றத்தில் நியமனத்திற்கு தடை வாங்கினார்கள்.
இதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? என்னைத் தவிர எவனும் கோவில் கருவறைக்குள் வரக்கூடாது என்கிறார்கள். பொதுவாக சாதியைப் பற்றி பேசினால் பலரும் இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறாங்க என்று கேட்கிறார்கள். இதோ இது தான் ஆதாரம், இது தான் சான்று. இதற்கு பெயர் என்ன? அப்பட்டமான, பச்சையான சாதிவெறி இல்லையா இது? இவர்கள் தான், இந்த பார்ப்பனர்கள் தான் வெறித்தனமாகவும், பார்ப்பன கொழுப்பு கொப்பளிக்கவும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள். கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இவர்கள் தான் கோவில் கருவறைக்குள் முழு இடஒதுக்கீடும் தமக்கே வேண்டும் என்று ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்துக்களில் பார்ப்பனர்கள் வெறும் மூன்று சதவிகிதம் தான். மூன்று சதவிகிதம் உள்ள பார்ப்பன கும்பல் மிச்சமுள்ள தொண்ணூற்று ஏழு சதம் இந்துக்களை, அதாவது பெரும்பான்மையான இந்துக்களை கோவில் கருவறைக்குள் விட மறுப்பது ஏன்? இது தான் மிக முக்கியமான கேள்வி. நீங்கள் இந்தியாவின் ஜனாதிபதியாகலாம், பிரதமர் கூட ஆகிவிடலாம் ஆனால் கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது ! ஏனென்றால் பெரும்பான்மை மக்களை இந்து மதம் சூத்திரன், பஞ்சமன் என்கிறது. சூத்திரன் என்றால் என்ன தெரியுமா? வேசி மக்கள் என்று அர்த்தம். அந்த வேசி மக்கள் சாமியை தொட்டால் சாமி தீட்டாகி பவரை இழந்துவிடும் என்கிறான் பார்ப்பான். அதனால்தான் பிறப்பிலேயே உயர்ந்தவனாகிய என்னைத்தவிர எவனும் உள்ளே வரக்கூடாது என்கிறார்கள்.
இது செருப்பால் அடித்தது போல் இல்லை? இது அவமானமாகவும், அசிங்கமாகவும் இல்லையா? இந்த நாடு வல்லரசு ஆகிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிறார்கள், ஆனால் சாமியை கும்பிடுவதற்குக் கூட இங்கு ஜனநாயகம் இல்லை.
இங்குள்ள கோவில்களில் எல்லாம் ஆகமவிதிப்படி தான் எல்லாம் நடக்கிறதா ? கோவில்களையே லாட்ஜாகவும், டாஸ்மாக் பாராகவும் பயன்படுத்தும் கிரிமினல் சங்கராச்சாரி, தேவநாதன், தில்லை தீட்சிதர்கள் எல்லாம் ஆகமவிதிகளின் படி தான் நடந்து கொள்கிறார்களா?
இது தமிழனுக்கு நேர்ந்த இழிவு மட்டுமல்ல, தமிழுக்கும் நேர்ந்த இழிவு. தமிழனைப் போல தமிழ் மொழியும் கருவறைக்குள் நுழைய முடியாது. தமிழர்கள் வேசி மக்கள் என்றால் அவர்களின் மொழி வேசி மொழி, நீஷ பாஷை என்று கூறி கருவறைக்குள் விட மறுக்கிறது பார்ப்பனியம்.
எனவே யார் யாரெல்லாம் தன்னை இந்து என்று கருதிக்கொள்கிறார்களோ, யார் யாரெல்லாம் தமிழ் என்னுடைய தாய் மொழி என்று கூறுகிறார்களோ அவர்களுடைய பிரச்சினை இது. உங்களுடைய பிரச்சினை இது. ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் நாங்க தான் அத்தாரிட்டின்னு பேசுகின்ற பி.ஜே.பி.யோ இந்து முன்னணியோ அல்லது வேறு எந்த இந்து அமைப்புகளுமோ இந்தப் பிரச்சினையில் தலையிடவில்லை. அவர்கள் அமைதியான முறையில் ஆலையத் தீண்டாமையை அங்கீகரிக்கிறார்கள். நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தான் இந்தப்பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள்.
வருகின்ற இருபதாம் தேதி இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் இறுதி விசாரணைக்கு வருகிறது. பார்ப்பனர்களின் தரப்பில் பராசரன் என்கிற மூத்த வழக்குரைஞர் ஆஜராகிறார். அவருடைய வாதங்களை முறியடிக்க வேண்டுமானால் அவருக்கு இணையான வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டுக்கு எல்லோரும் சாதாரணமாக போய்விட முடியாது. ஒரு வழக்குரைஞரை நியமித்து அவர் ஒரு முறை எழுந்து நின்று வாதாடினாலே சில பல லட்சங்களை எடுத்து வைக்க வேண்டியிருக்கும். பார்ப்பனர்களுக்கு பல லட்சங்களை கொட்டி அழுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் முதலாளிகளிடமோ, கந்து வட்டிக்காரர்களிடமோ, சமூக விரோதிகளிடமோ போய் கையேந்துபவர்கள் அல்ல. மாறாக அனைத்து போராட்டங்களுக்கும், வழக்குகளுக்கும் மக்களையே சார்ந்து நிற்கிறோம். உழைக்கும் மக்கள் வழங்கும் நிதியிலிருந்து தான் எமது போராட்டங்களையும் வழக்குகளையும் நடத்துகிறோம். அந்த வகையில் இந்த வழக்கை நடத்துவதற்கான நிதியை கோரி உங்கள் முன்னால் வந்திருக்கிறோம். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதன் மூலம் சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட உங்களையும் எங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள். சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட நிதியளித்து ஆதரவு தாருங்கள். நன்றி.
என்று உரையாற்றிய பிறகு தமது பங்கேற்பை உறுதிபடுத்தும் வகையில் மக்கள் நிதியளிப்பார்கள். இந்த நிதிவசூல் பிரச்சாரம் எந்த தடையுமின்றி நடந்துவிடவில்லை. இந்த பிரச்சாரம் மட்டுமல்ல எந்த பிரச்சாரமும் அப்படி நடப்பதில்லை. பல்வேறு இடையூறுகள், தடைகள், சண்டை சச்சரவுகளைக் கடந்து தான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் நிதிவசூல் நடத்தப்படுகிறது. சிறப்பாக இந்த பிரச்சாரம் நேரடியாக இந்து மதத்தின் தீண்டாமையை தாக்கக்கூடியதாக இருப்பதால் வரவேற்பும் எதிர்ப்பும் சேர்ந்தே இருக்கிறது.
இந்து முன்னணி லும்பன்கள், ஆர்.எஸ்.எஸ் இல் இல்லாத ஆர்.எஸ்.எஸ் காரர்கள், பார்ப்பனியத்தை ஆதரிப்பவர்கள், பார்ப்பனர்கள், கருப்பு பார்ப்பனர்கள் என்று பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது. இவர்களைத் தவிர பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் விசயத்தை கூர்ந்து கவனித்து மகிழ்ச்சியோடு நிதியளித்தார்கள். பார்ப்பனர்களையும் கருப்பு பார்ப்பனர்களை எதிர்த்து கேள்வி எழுப்பினார்கள்.
ரு பெட்டியில் தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு பார்ப்பனரும் அவரோடு ஒரு கருப்பு பார்ப்பானரும் சேர்ந்து கொண்டு இந்து மதத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சண்டைக்கு வந்தனர்.
“ஏய் நிறுத்துடா மதத்தை பத்தியும், சாதியை பத்தியும் இங்க பேசாதே!” என்றனர்.
தோழர்கள் பதிலளிப்பதற்குள் தரையில் அமர்ந்துகொண்டிருந்த உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் பாய்ந்துகொண்டு வந்தார்
“ஏன் பேசக்கூடாது, அவனுங்க பன்ற அட்டகாசம் தாங்க முடியலய்யா, காது குத்திலிருந்து கல்யாணம் வரைக்கும் எல்லாத்துக்கும் ஐயாயிரம் பத்தாயிரம்னு காசப் புடுங்குறானுங்க, கொள்ளையடிக்கிறானுங்க. அதை பேசக் கூடாதா ? அவங்கள பேசக்கூடாதுன்னு சொல்ல நீ யாருய்யா? தம்பி நீ பேசுப்பா” என்றார். இரண்டு பேரும் கப்சிப் ஆகிவிட்டார்கள். அதோடு அடுத்த ஸ்டேஷனில் இறங்கியும் போய் விட்டனர்.
ன்னொரு பெட்டியில் பேசிக்கொண்டிருந்த போது குழந்தை குட்டிகளோடு வந்திருந்த நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் எழுந்து நின்று ஆவேசமாகக் கத்தத் துவங்கி விட்டார். “இந்து மதத்தை பத்தி நீ எப்படி பேசலாம், வெளிய போடா நாயே, டிரெய்ன விட்டு கீழ இறங்குங்கடா” என்றார். தோழர்கள் பொறுமையாக விளக்கமளித்தனர். இருந்தும் அவர் அடங்கவில்லை.
“சரி நாங்கள் பேசுவதைப் போல நீங்களும் உங்கள் கருத்தை மக்கள் மத்தியில் நின்று பேசுங்கள்” என்றனர். அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. அத்துடன் “தே.பசங்களா, மகனுங்களா” என்றெல்லாம் கெட்ட வார்த்தைகளில் ஏசத்துவங்கிவிட்டார். அதன்பிறகு தோழர்கள் அவரை நையப்புடைத்து விட்டார்கள். அடி உதைகளால் அல்ல வார்த்தைகளால். நாலா பக்கமும் சூழ்ந்துகொண்டு அவரை நோக்கி தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடிப்போனார்.
இதற்கிடையில் அவருடைய வேட்டி வேறு அவிழ்ந்துவிட்டது. வேட்டியை சரி செய்வதா பதிலளிப்பதாக என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார். அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிட்டு தோழர்கள் அடுத்த ஸ்டேஷனில் இறங்கினர்.
தொண்ணூற்று ஒன்பது சதம் பார்ப்பனர்கள் வாயையே திறக்கவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர்.
ரு பெட்டியில் ஆறு ஏழு பார்ப்பனர்கள் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களில் நீட்டாக பேண்ட் ஷ்ர்ட் அனிந்து உச்சிக்குடுமியுடன் அமர்ந்துகொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பார்ப்பனர் துண்டறிக்கையை கேட்டு வாங்கி படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது தான் டாஸ்மாக்கிலிருந்து வந்திருக்கிறார் என்பது அவரைக் கடந்து சென்ற போது நன்றாக தெரிந்தது.
பேசிக்கொண்டிருந்த தோழர் ’பார்ப்பனக் கும்பல்’ என்ற வார்த்தையை உச்சரித்ததும் “டேய்” என்றார் லும்பன் பார்ப்பனர். அதை சட்டை செய்யாமல் தோழர் தொடரவே அடுத்ததாக “வேண்டாம்… வேண்டாம்..” என்று இழுத்தார். உடனே அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு தோழர் “என்ன வேண்டாம்.. என்ன..” என்று கேட்டுக்கொண்டே அருகில் நெருங்கியதும் உச்சிக்குடுமி பார்ப்பனர் உதிரிப் பார்ப்பனரை பார்த்து ’எதுக்கு சும்மா டென்ஷன் ஆகிறேள்’ என்றார் ஏதோ ஒரு அர்த்தத்துடன். அத்துடன்டு லும்பன் பார்ப்பனர் நிதானமாக பேச முடியாத நிலையிலும் இருந்ததால் வாயை மூடிக்கொண்டார்.
ன்னொரு கம்பார்ட்மெண்டில் உலகறிந்த பொறுக்கியான நித்தியானந்தாவைப் பற்றி பேசியதற்கு ஒருவர் சண்டைக்கு வந்துவிட்டார். தமிழகத்தில் நித்திக்கெல்லாம் ஆதரவாளர்கள் இருக்கிறார்களே என்று அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு தான் “அந்தாள் நித்தியோட சாதிக்காரன் தோழர் அதனால தான் அவனுக்கு கோபம் வருது” என்றார் ஒரு தோழர்.
வேறொரு பெட்டியில் பேசி முடித்ததும் “சங்கராச்சாரியை பற்றி தப்பா பேசாதீங்க” என்றார் ஒரு பார்ப்பனர். ஏன் என்பதில் துவங்கி பல்வேறு கேள்வி பதில் மறுப்பு என்று போய்க்கொண்டிருந்த விவாதத்தில், “சரி ஜெயேந்திரரை நீங்க மகா பெரியவான்னு சொல்றீங்க அந்த மகா பெரியவா இப்போ நித்தியானந்தாங்கிற மகா பொறுக்கியை பார்த்திருக்கிறாரே அதுக்கு என்ன சொல்றீங்க” என்றதும், “அது அவரோட பர்ஸ்னல்(!) விஷயம்” என்றார். கடைசியில் “நான் என்ன சொல்ல வர்றேன்னா ஜெயேந்திரரை நீங்கள் குற்றவாளின்னு சொல்ல முடியாது ஏன்னா வழக்கு நீதிமன்றத்தில் நடந்துட்ருக்கு அவர் குற்றவாளியா இல்லையான்னு நீதிமன்றம் தான் சொல்லணும். வேணும்னா பொறுக்கின்னு சொல்லிக்கிங்க “என்றார். இவர் நூறு ரூபாய் நன்கொடையும் போட்டார். இது என்ன மாதிரி கேஸ் என்பது புரியவில்லையே என்று எண்ணிக்கொண்டே அடுத்தப் பெட்டிக்கு ஓடினோம்.
தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டிருந்த போதே மூலையில் அமர்ந்திருந்த ஒருவர் விதம் விதமாக முகத்தை சுழித்துக்கொண்டிருந்தார். பிறகு நிதி கோரி உண்டியலை ஏந்திச் சென்ற போதும் “ச்சீ.. போ அந்தப்பக்கம்” என்பதைப் போல நிதி தர மறுத்து வேகமாக தலையை ஆட்டினார். அவ்வாறு தலையை ஆட்டியதில் ‘நான் மட்டுமல்ல நீங்களும் போடாதீர்கள்’ என்று மற்றவர்களுக்கும் சேர்த்து ஆட்டியதை போல இருந்தது. அந்த பெட்டியில் பேசி முடித்ததும் மதிய உணவு இடைவேளைக்காக இறங்க வேண்டும் என்பதால் அதே பெட்டியிலுள்ள இருக்கைகளில் அமர்ந்தோம். ஒரு தோழர் மட்டும் அந்த நபரை ஆரம்பத்திலிருந்தே கவனித்துக்கொண்டே இருந்தார்.
தமிழ்நாடு பார்ப்பனர்
அந்த நபருக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் நிதியளித்திருந்தனர். துண்டறிக்கையை அனைவரும் கூட்டாக சேர்ந்து வாசித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் தான் அந்த முக்கியஸ்தர் அமர்ந்துகொண்டிருந்தார். அவர் அந்த மாணவர்களிடம் “இதெல்லாம் என்னப்பா முட்டாள்தனமா இருக்கு, எல்லோரும் அர்ச்சகராகனும்னு பேசுறாங்களே இதெல்லாம் தேவையா? தேவையில்லாத வேலைப்பா” இது என்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்ததை அந்த தோழர் பார்த்து விட்டார்.
உடனே அனைத்து தோழர்களும் அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு மாறினர். “உங்கள் பிரச்சினையை எங்ககிட்ட சொல்லுங்க சார்” என்றதும் அவர் அதிர்ந்து போனார். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தோழர்கள் இறங்காமல் அதே பெட்டியில் அமர்ந்துவிட்டதை அவர் கவனிக்கவில்லை, இறங்கிப் போய்விட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு தான் மாணவர்களிடம் தனது பார்ப்பன ஆதரவுப் பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார்.
இருந்தாலும் சமாளித்துக்கொண்டு “எதுக்கு எல்லோரும் அர்ர்சகராகனும்னு சொல்றீங்க” என்றார். “ஆகம விதிப்படி அமைந்த இந்துக்கோவில்களில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் கருவறைக்குள் நுழைய முடியாதுங்க…” என்று விளக்கிக்கொண்டிருக்கும் போதே, “ஏன் நான் நுழைஞ்சிருக்கேனே” என்றார். “நீங்க ஏதாவது ஒரு கருப்பசாமி கோவில்ல நுழைஞ்சிருக்கலாம் சிறீரங்கம், திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி போன்ற கோவில்களில் நுழைய முடியாது, ஏன் தெரியுமா? ஏன்னா அது தீட்டு” என்று விளக்கினோம்.
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல காலம்காலமா இப்படித்தான் இருக்கு, இந்து மதம் எல்லோருக்கும் சொந்தமானது தான் நீங்க தான் பர்ப்பனர்களை மட்டுமே வேணும்னு திட்றீங்க அந்த கோவில் இல்லைன்னா வேற கோவிலுக்கு போங்க அங்கே ஏன் போறீங்க” என்றார்.
“வேற கோவிலுக்கு போறதெல்லாம் இருக்கட்டுங்க அந்த கோவிலுக்குள்ள ஏன் விடமாட்டேங்கிறாங்கிறதை முதல்ல பேசுங்க. இடஒதுக்கீட்டை எதிர்க்கிற இந்த பார்ப்பனர்கள் தான் கருவறைக்குள்ள நூறு சதவீதம் இடத்தையும் ஆக்கிரமிச்சிக்கிட்டு மத்தவங்களை விடமாட்டேங்கிறாங்க” என்றதும்.
“இடஒதுக்கீடே குடுக்கக்கூடாதுங்கிறேன் எதுக்கு இடஒதுக்கீடு ? இடஒதுக்கீடு கொடுக்கிறதால தான் திறமை இல்லாம போகுது” என்றார்.
“சார் நீங்க பாப்பானுக்காகவும் இந்துமதத்துக்காகவும் ரொம்ப வருத்தப்படுறீங்க. இந்து மதத்துக்காக இவ்வளவு பேசுறீங்களே பகவத்கீதையோட பதினாறாவது அத்யாயத்துல கண்ணன் என்ன சொல்றான்னு தெரியுமா?” என்றதும் திரு திருவென்று முழித்தார். அருகில் அமர்ந்திருந்த மாணவர்களையும் பார்த்துக்கொண்டார். மாணவர்கள் நக்கலாக பார்த்துக்கொண்டிருந்தனர். கடைசியில் “தெரியல நீங்களே சொல்லுங்க” என்றார்.
“சரி, மனுஸ்மிருதியில் பார்ப்பனர்களைத் தவிர உள்ள பெரும்பான்மை மக்களை என்னன்னு எழுதி வச்சிருக்கான்னு தெரியுமா?” என்றோம் அதற்கும் “தெரியாது நீங்களே சொல்லுங்க” என்றார். இதற்கிடையில் அனைவரும் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. பிளாட்பாரத்தில் இறங்கியும் அவருடைய பார்ப்பன அடிவருடித்தனத்தை அம்பலப்படுத்திக்கொண்டிருந்தோம். அந்த மாணவர்கள் பிளாட்பாரத்தில் இறங்கிய பிறகும் அவரை வடிவேலைப் பார்ப்பதைப் போல பார்ப்பதை விடவில்லை. மாணவர்களுக்கு புத்திமதி சொல்லப்போய் அவர்கள் காரித்துப்பாத குறையாக அந்த நபர் அனைவரின் முன்பாகவும் அவமானப்பட்டுப்போனார்.
இதைப்போன்று இன்னும் பல்வேறு சம்பவங்களும் இந்த நிதிவசூல் அனுபவத்தில் கிடைத்தன. அனைத்தையும் குறிப்பிட்டால் நான்கு பதிவுகளாக விரியும். பார்ப்பனியத்தை எதிர்த்து செய்யப்பட்ட இந்த பிரச்சாரத்தில் பொதுவாக பெரும்பான்மையாக உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கும், மாணவர்கள் மத்தியில் குறிப்பிடும்படியும் வரவேற்பு இருந்தது. இவர்கள் அனைவரும் நிதியளித்து ஆதரவளித்தனர்.
பிரச்சாரத்தின் வீச்சாலும் அதன் நியாயத்தாலும் பார்ப்பனர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கப்சிப் ஆகியிருந்தானர். பார்ப்பனமயமாக்கப்பட்ட பலர் பார்ப்பனர்களாக இல்லாவிட்டாலும் பார்ப்பனர்களுக்காக பரிந்துபேசினார்கள். பார்ப்பனர்களை விட இத்தைகைய கருப்புப் பார்ப்பனர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவர்களை கருத்து ரீதியாக வீழ்த்தாவிட்டால்பெரியார் பிறந்த மண் என்று இனியும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.

தொடர்புடைய பதிவுகள்


VINAVU


ஸ்ரீரங்கம் கோவில் பணியாளர் நியமனத்துக்கு நீதிமன்றம் தடை

Dinamani

By  மதுரை
First Published : 21 March 2013 08:29 AM IST

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்புக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது
.
 திருவண்ணாமலையைச் சேர்ந்த அரங்கநாதன் தாக்கல் செய்த மனு: 
 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதான ஸ்ரீபாதம் பதவி உள்ளிட்ட 29 பணிகளுக்கு, கோவில் நிர்வாக அதிகாரி 2013 பிப்.13 இல் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
 
 காலிப் பணியிடங்களில் 9 பணிகளுக்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டு இருந்தது. 

 அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அரசு 2006 இல் அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகப் பணிக்கான அறிவிப்பு, இந்த ஆணைக்கு முரணாக உள்ளது. எனவே, இந்த அறிவிப்புக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.

 மனுவை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், கோவில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இது தொடர்பாக, இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் அய்யங்காருக்கு மட்டும் வேலை; மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!




HC stays notification for Srirangam temple jobs


THE HINDU

Today's Paper » NATIONAL » TAMIL NADU

MADURAI,

The Madurai Bench of the Madras High Court here on Wednesday ordered an interim stay on the operation of a notification issued by the Joint Commissioner of Srirangam Sri Ranganathaswamy Temple, calling for applications from Brahmins for various posts in the temple.

The notification issued on February 13, 2013, invited applications from only Brahmins for the post of ‘pradhana alaya sripadham’, ‘upakoil sripadham’, ‘sannithivasal’, and ‘upakoil parisarakar’, claimed petitioner V. Aranganathan (25), a native of Thiruvannamalai. No condition was laid for application of posts such as junior assistant and ‘pradhana alaya kavalar’.

“There cannot be any discrimination in public employment on the basis of caste. The impugned notification violates Articles 14 and 16 of the Constitution. It also amounts to 100 per cent reservation for the four posts,” he contended.

The petitioner argued that the impugned notification encourages a caste-oriented clergy in the temple, which is against the constitutional philosophy. Therefore the notification should be declared illegal and quashed, he said.

Justice D. Hariparanthaman admitted the petition and stayed the operation of the impugned notification on Wednesday.


More In: TAMIL NADU | NATIONAL

ஸ்ரீரங்கம் கோயிலில் அய்யங்காருக்கு மட்டும் வேலை; மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!


ஸ்ரீரங்கம் கோயிலில் அய்யங்காருக்கு மட்டும் வேலை; மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயில் பணிக்கு அய்யங்கார் சமுதாயத்தினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அரிவிப்புக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் சார்பில் கடந்த மாதம் காவலாளி தொடங்கி சாமியை தூக்கிச் செல்லும் ஸ்ரீபாதம் வரையிலான ஏழு வகையான வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், பிரதான ஆலய ஸ்ரீபாதம், உப கோயில் ஸ்ரீபாதம், சன்னதி வாசல், உப கோயில் பரிசாரகர் ஆகிய பணிகளுக்கு இந்து பிராமண அய்யங்கார் சமுகத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கும்படி கூறப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், அதை ரத்து செய்யக் கோரியும் 'அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம்' சார்பில் அதன் தலைவர் திருவண்ணாமலை அரங்கநாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.



அந்த மனுவில், "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்து கோயில்களில் கருவறைக்குள் பிராமணர்கள் தவிர வேறு யாரும் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்.

தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எதுவும் கருவறைப் பணிகள் கிடையாது. கருவறைக்கு வெளியே செய்கிற பணிகளுக்குக்கூட பிராமண அய்யங்கார் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியிருப்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது. பொதுப் பணித்துறை, வருவாய்த் துறைபோல அறநிலையத் துறையும் அரசின் துறைதான். இந்துக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லலாமே தவிர, இந்து அய்யங்கார்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. எனவே கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்.’’ என்று கூறப்பட்டிருந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நம்மிடம், "மேற்கண்ட பணிகளுக்கு இந்து பிராமண அய்யங்கார்களை நியமிப்பது பாரம்பரியமாக நடந்து வரும் மரபு என்று கோயில் நிர்வாகம் சொல்கிறது. பால்ய விவாகம், உடன் கட்டை ஏறுதல், தேவதாசி முறை போன்றவையும் ஒரு காலத்தில் இந்தியாவில் பாரம்பரிய மரபாக இருந்தன. 1956ல் அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இது எல்லாம் சட்டவிரோதச் செயல்களாக மாறிவிட்டன. அதே போல கோயில் பணிக்கு மற்ற சாதியினரை நியமிக்கக் கூடாது என்று சொல்வதும் தவறுதான். அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டிய தி.க., தி.மு.க. போன்ற அரசியல் இயக்கங்கள் அமைதியாக இருப்பது வேதனை அளிக்கிறது" என்றார்.

-  கே.கே.மகேஷ்