Saturday, September 17, 2011

Secular Threads

                                           Tamil Nadu: religion
                                         Secular Threads
      Non-Brahmin priests fight for their rights

 Religion, and the passionate partisanship it can inspire, colours every aspect of life in India. In orthodox Tamil Nadu, during a heated debate in the state assembly last week over the appointment of atheists as temple trustees, CPI(M) MLA A. Sounderarajan said, “Faith can be an individual affair. But the government should remain secular.” It’s a question of particular import to the 207 non-Brahmin students who were trained as archakas (priests) three years ago and are still waiting for jobs in the 36,000-odd temples administered by the HR&CE (Hindu Religious and Charitable Endowments) department of the state government. The previous DMK government had taken the radical step of trying to do away with the caste barrier in appointing archakas, but did nothing in the last six years once the Supreme Court gave an interim stay on the appointment of the 207 students after it was challenged by an established order of priests. The students do not expect the Jayalalitha government to stick its neck out for them either. “Tokenism is what the DMK indulged in, not a sincere effort of trying to change the social order,” says Raju, an advocate representing the non-Brahmin archakas.
The training of the students was a sequel to Karunanidhi promulgating an ordinance on July 14, 2006, declaring that suitably trained and qualified Hindus, without “discrimination of caste, creed, custom or usage”, would be appointed as archakas. Predictably, the ordinance was challenged in a batch of petitions by the Adi Saiva Sivachariyargal Sangam, Thennindia Thirukkoil Archagargal Paripalana Sabhai and others, contending that it was unconstitutional and violative of the shastras, custom and usage. The petitioners argued that the ordinance, purportedly a step towards social reform, had reversed the settled law (an attempt in the ’70s to promulgate a similar law was rejected by the SC).
 

 

Various priests’ bodies said the attempt to abolish the caste barrier in appointing priests reversed settled laws.
 

 
V. Ranganathan, state coordinator of the Tamil Nadu Government Archakar Training Students Association, who impleaded himself in the case in 2009, is at the forefront of the archakas’ protests, including fasts. “We want the stay vacated and jobs,” he told Outlook. Ranganathan, based in Tiruvannamalai, passed the course in 2008. The course was an offshoot of the recommendations of the Rajan committee, set up to decide on training and qualifications of archakas, and led to the starting of the archaka training centres. The 207 included 76 students from backward classes, 55 from most backward classes and 34 from scheduled castes. “I became a pujari as I am a devotee,” says Ranganathan. Adds K. Venkadesan, a scheduled caste student, “I want to perform rituals.” P. Ganeshan, near Sattur in Virudhanagar district, quit his job at a textile mill to enroll. “My family is proud that a scheduled caste boy can recite the mantras,” he says. The archakas say they have faced threats from the Hindu Munnani, Brahmin priests and others. “At the ayudha puja last year, some alleged RSS elements intimidated us,” says Ranganathan. Even during the course, Ramakrishna Jeeyar, who taught them the agamas in Sanskrit, was reportedly assaulted. A source conversant with temple affairs explains, “Devotees believe that only Brahmins can enter the sanctum sanctorum.”
The case of the Shankaracharya, an accused in a murder case, has come in handy for the students: “If there is no defilement when the Shankaracharya touches idols, how can the power of the idols dissolve if we touch them?” The archakas can take comfort in the wounded grumble of a Brahmin priest: “If Karunanidhi indulged in this so-called social equality for political purposes, Jayalalitha, known for her drastic steps, may also intervene on the archakas’ behalf to further a political agenda.”

Monday, July 11, 2011

பயிற்சி மாணவர் பூஜை செய்த விநாயகருக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் பூஜை செய்ய மறுப்பு!!!

  • திருவண்ணாமலை கோயிலுக்குள்ளே அராஜகம்!
  • அனைத்து ஜாதியினருக்கான அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிமீது தாக்குதல்!!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினையில் அ.தி.மு.க அரசின் நிலைப்பாடு என்ன?

திருவண்ணாமலை, ஜூலை 9: திருவண்ணாமலை அருணாசல ஈசுவரர் கோயிலில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது, அனைத்து ஜாதியனரும் அர்ச்சகராகும் வகையில் பயிற்சி அளிக்கப் பட்டிருந்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. பெயர் பொறிக்கப்பட்ட பதாகையும் கிழித்து எறியப்பட்டது.
இது குறித்து நமது சிறப்புச் செய்தியாளர் தெரிவிப்பதாவது: திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோயிலில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தில், திருவண்ணாமலை பெரிய கோயிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி 2007-08 முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஓராண்டு பயிற்சி நிறைவு செய்த மாணவர்களைப் பணியமர்த்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், பயிற்சிப் பள்ளியில் உள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி என்ற டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்ததை மர்ம நபர்கள் கிழித்து எறிந் துள்ளனர். சிறு சிறு சிற்பங்கள் உடைக்கப்பட்டிருந்தன என தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து விடுதலை செய்தியாளர் விரைந்து சென்று அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள பயிற்சிப் பள்ளியை பார்வையிட்டார். ஆனால் அனைத்து வாயில்களிலும் பூட்டுப் போடப்பட்டு இருந்தது.  அங்குள்ளவர்களிடம் கேட்டபோது யாரும் அது குறித்து சரியான விளக்கம் அளிக்கவில்லை. அதன் பின்னர் அந்தப் பள்ளியில் படித்த பழைய மாணவரும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க மாநிலத் தலை வருமான வா. அரங்கநாதன் அவர்களை, கைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களை சந்திக்க உள்ளதாகவும் அங்கு வாருங்கள். நேரில் பேசிக்கொள்ளலாம் எனக் கூறினார். அவரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோயிலில் நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது:

நான் சில தினங்களுக்கு முன் கோயிலில் சாமி கும்பிடுவதற்காகச் சென்றிருந்தேன். சாமி தரிசனம் முடித்துக் கொண்டு பயிற்சியின்போது பயன்படுத்திய சிலைகள் இருக்குமிடத்திற்குப் போனேன்.  ஆனால் நாங்கள் பயிற்சியில் பயன்படுத்திய சிலைகளுக்கு பூஜைகள் செய்யாமல் தூசி படிந்த நிலையில் இருந்தன.   கோயில் அலுவலரிடம் கேட்டேன். நீங்கள் பூஜை செய்த சிலையை அய்யர் பூஜை செய்யமாட்டார் என்று கூறியதாகச் சொன்னார். அதன்பின் பயிற்சிப் பள்ளி உள்ளே சென்றேன். அங்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி, திருவண்ணாமலை என பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை கிழித்து எறியப் பட்டிருந்தது. அங்கு நாங்கள் பயன்படுத்திய சிறுசிறு சிலைகள் உடைத்து நொறுக்கப் பட்டிருந்தன. பிறகு என்ன நடந்தது என கேட்டதற்கு நான் என் நண்பர்களுடன்  கலந்தாலோசித்து இந்தத் தீண்டாமை செயலை வெளியுலகிற்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்து கலைஞர் தொலைக்காட்சி செய்தி யாளர் அவர்களைத் தொடர்பு கொண்டுநடந்ததைச் சொன்னேன்.  அவரும் என்னுடன் வாருங்கள் செய்தி  சேகரிக்க என்று கூறி ஒளிப்பதிவு கேமராவுடன் சென்றோம். 6-7-2011 மாலை கோயிலுக்குச் சென்று நாங்கள் பயன்படுத்திய சிலைகளைப் படம் பதிவு செய்து கொண்டு பயிற்சிப் பள்ளியின் உள்சென்று அங்கு கிழிக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகை, உடைக்கப்பட்டு இருந்த சிலைகளைப் படப் பதிவு செய்து கொண் டிருந்தோம்.
அப்போது (ஜவான்) சேகர் காவலாளி வேகமாக வந்து கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளரையும், பயிற்சிப் பள்ளி மாநிலத் தலைவரான அரங்கநாதன் ஆகிய என்னையும் படம் எடுக்கக் கூடாது என்று தள்ளினார். பிறகு தள்ளு முள்ளு ஏற்பட்டு தாக்கவும் முயற்சித்துள்ளார். சேகர் காவலாளி. இவர் பயிற்சி நடைபெற்றிருந்த நாள்களிலே கூட பல இடையூறுகளைச் செய்து வந்தார் எனவும் கூறினார். பின்னர் அருகிலுள்ள நிருவாக அலுவலக ஊழியர் கோபி இருவரையும் விலக்கி விட்டார். பின்னர் கோயில் கண்காணிப்பாளர் சீனுவாசன் என்பவர் அரங்கநாதனை, நீ எல்லாம் பயிற்சிப் பள்ளி உள்ளே வரக்கூடாது என ஆவேசமாகப் பேசினார். பிறகு வாக்கு வாதம் முற்றியது. அலுவலக ஊழியர்கள் வந்து விலக்கினார்கள் என அரங்கநாதன் கூறினார். கோயில் நிருவாக அலுவலகம் அருகே உள்ள இந்தப் பயிற்சிப் பள்ளியில் சிலைகள் உடைக்கப்பட்டு, பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அங்கு உள்ளவர் களைத் தவிர வேறு எவரும் இந்தச் செயலைச் செய்திருக்க முடியாது எனக் கூறினார். இந்த விவரங்களை மனுவில் உள்ளடக்கி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் 7-7-2011 அன்று மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அதன்மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

(குறிப்பு: அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் மா. அரங்க நாதன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிக் கொடுத்த கடிதம் 3-ஆம் பக்கம் காண்க)

 http://viduthalai.in/new/headline/13410-2011-07-09-10-03-26.html

Tiruvannamalai Archagarpalli.mpg


http://www.youtube.com/watch?v=tUllL_Wq648

Monday, July 4, 2011

Please do your support for Archakar Manavar Sangam Financially means send the money to this Name: V.Ranganathan, Account Number: 949119860(Indian Bank, Tiruvannamalai District Branch) - We are collecting this fund from people for our Case in Supreme Court and our fighting against government till we get job as archakar..please do your support and as well as financially...
please,Support News and Media Partners for Us Because the Archakar School, they didnt do proper pooja on time for the last two years..if you fine the above album you know the truth...
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் அர்ச்சகர் பயிற்சி நிலையத்தில் ஆலயத்தீண்டாமையைக் கடைபிடிப்பு இதை பற்றி விரிவாக தெரிவுப்பு

ARCHAGAR TRAINED STUDENTS SOCIETY-TAMILNADU
 REGD. No. 189/09
 128, Gokulam Illam, Arasamara street
Tiruvannamalai.
cell: 9047400485
 http://appsa-tn.blogspot.கம

 

Thursday, March 10, 2011

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழியுறுத்தி அர்ச்சக மாணவர்கள்,மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முற்றுகைப் போராட்டம்


அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழியுறுத்தி அர்ச்சக மாணவர்கள்,மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முற்றுகைப் போராட்டம் .................................

       4.3.2011 அன்று உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் மீண்டும் தமிழக அரசு வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிக்காமல் இருக்க வழியுறுத்திப் போராட்டம் நடத்துவதெனத் தீர்மானித்து 3.3.2011 நண்பகல் 12 மணிக்கு அர்ச்சக மாணவர்களும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்கு கோபுர வீதியில் ஊர்வலமாகச் சென்று தெற்கு கோபுர வாயில் முன்பு முற்றுகையிற்றுப் போராட்டம் நடத்தினர்.மாணவர்களும்,மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும் போராட்டம் நடத்த வருவதை அறிந்த மீனாட்சியம்மன் கோயில் பார்ப்பன சிவச்சாரியார்களும் பட்டர்களும் கோயிலின் தெற்க்கு வாயிலை அடைத்து விட்டனர்.பட்டர்களுக்கு ஆதரவாக மதுரை மாநகர காவல்துறையினர் தெற்க்கு வாயிலை அடைத்து அணிவகுத்து நின்று கொண்டன்ர்.கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காலணிகள் பாதுகாக்கும் இடத்தில் போராட்டக்காரர்களின் செருப்பைக்கூட வாங்க மறுத்து விட்ட நிலையில் செருப்புகளை வீதியிலே விட்டெறிந்துவிட்டு கொளூத்தும் வெயிலில் வழக்கறிஞர்களூம் , அர்ச்சக மாணவர்களூம் அரைமணி நேரத்திற்க்கும் மேலாக விண்ணதிர முழக்கமிட்டு முற்றுகைபோராட்டத்தைத் தொடர்ந்தனர்.

    போராட்டத்தில் அனைத்து சாதி அர்ச்சக மாணவர்களை அர்ச்சகராக விடாமல் சூழ்ச்சி செய்து உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆதி சிவாச்சார்யார்களைக் கண்டித்தும்,உச்சநீதிமன்ற வழக்கை விரைந்து நடத்தாத தமிழக அரசைக் கண்டித்தும்,ஆலயத் தீண்டாமையை ஈராயிரம் ஆண்டுகளாக அமல்படுத்தி தகுதி வாய்ந்த பிற்பட்ட,தாழ்த்தப்பட்ட மாணவர்களை கருவறைக்குள் அனுமதிக்க மறுக்கும் பார்ப்பன அர்ச்சகர்களிடம் தமிழர்கள் திருநீறு வாங்கக் கூடாதெனவும், பெரியாரின் வாரிசாக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் கருணாநிதியின் கபட வேடத்தை அம்பலப்படுத்தியும் ,4.3.2011 அன்று வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்தி அர்ச்சக மாணவர்களுக்கு பணிநியமனம் வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.இக்கோரிக்கைகளை வழியுறுத்தி 2000 துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

       முதலில் போராட்டம் நடத்தியவர்களிடம் போராட்டத்திற்க்கு அனுமதி பெறவில்லை முழக்கமிட்டுக் கலைந்து செல்லுங்கள் எனக் கோரிய போலீசிடம் முற்றுகைப் போராட்டத்திற்க்கு அனுமதி பெற முடியாது; கலைந்து செல்லவும் முடியாது என உறுதியாகச் சொல்லி போராட்டம் தொடர்ந்தது; போராட்டம் தொடர்ந்தால் கைது செய்வோம் எனப் போலீசு மிரட்ட கைதுக்குத்தான் போராட்டமே செய்கிறோம் உடனே கைது செய்யுங்கள் என மகிழ்ச்சியுடன் முழக்கமிட்டு போலீசு வேனில் ஏறினர் அர்ச்சக மாணவர்களும், வழக்கறிஞர்களும்.   
     போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்த போதும் காவல்துறையின் மிரட்டலுக்கு அஞ்சாமல் உறுதியாகப் போராடிய விதம் மக்களைக் கவர்ந்தது.

தி.மு.க அரசு 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், ஒன்றரை ஆண்டுக்காலம் முறையாகப் பயின்ற 207 மாணவர்கள் பணி நியமனம் பெற இயலாமல் கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பார்ப்பன சாதியைச் சார்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் என்ற பிரிவினரைத் தவிர்த்து, பிற சாதியினரை அர்ச்சகராக்குவது ஆகமவிதிகளுக்கும், இந்துமத சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்று மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.
இந்தத் தடையாணையின் விளைவாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முடங்கிவிட்டன. சைவ / வைணவக் கோயில்களில் வடமொழி மற்றும் தமிழில்  வழிபாடு நடத்துவதற்கு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, தீட்சையும் பெற்றிருக்கும் அர்ச்சக மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. 2009 நவம்பரில் மாணவர்களை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சங்கமாகத் திரட்டி. உச்ச நீதிமன்ற வழக்கிலும் இணைந்தோம். இதன் தொடர்ச்சியாக 2010 ஜனவரியில்தான் மாணவர்களுக்கு சான்றிதழே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் உச்ச நீதிமன்றத் தடையாணை காரணமாக இவர்கள் யாரும் இதுவரை அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை
பார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்என்றும் வலியுறுத்தியது. இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.
ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் இந்து மத உரிமைஎன்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள்  இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் பார்வையில், இந்த 207 மாணவர்களின் ஒரே தகுதிக் குறைவு அவர்களது பிறப்புதான். குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே இன்று பல்வேறு கோயில்களில் பணி செய்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகம விதிகளின் அடிப்படயில் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் போன்றோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர்களாகப் பணி செய்து வருகின்றனர். அவர்களில் தேவநாதன் போன்ற நல்லொழுக்க சீலர்களும்“  அடக்கம். 207 மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த தமிழக அரசு, தேவநாதன் உள்ளிட்டு இன்று பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாருக்கும் அத்ததகைய தேர்வு எதையும் நடத்தவில்லை. வழிபாட்டு முறைகள் தெரிந்தவர்களா, ஒழுக்கமானவர்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இருந்தும்கூட, அவ்வாறு யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தகுதி சாதி மட்டும்தான்.
  மாதச் சம்பளம் வழங்குவதுடன், அர்ச்சனைத்தட்டில் பக்தர்கள் போடுகின்ற பணத்தை எடுத்துக்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்து அறநிலையத்துறையின் உள்துறைப் பணியாளர்களாக இருந்து கொண்டு, மாதம் பல ஆயிரங்களை வருவாயாக ஈட்டும் மதுரைக் கோயில் சிவாச்சார்யார்கள்தான், அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.ஆனால் தமிழக அரசு இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கவில்லை.ஆனால் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினரான  நாங்கள் இப் பிரச்சினையை விடப் போவதில்லை.


பார்ப்பனீய சாதி ஆதிக்கத்திற்க்கு எதிராக உறுதியாக நின்ற ஒரு குமூடிமலை ஆறுமுகசாமியைக் கொண்டு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதப் பார்ப்பனர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம்,திருவாசகத்தை அரங்கேற்றி, கோயிலையே அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து  அடுத்ததாக அர்ச்சக மாணவர் போராட்டத்தில் களமிறங்கியுள்ளோம். மாணவர்களை சங்கமாக்கி உச்சநீதிமன்ற வழக்கில் இணைந்தது என்று சட்ட ரீதியிலும் , மாணவர்களை அணிதிரட்டி வீதியிலும் என்ற வகையில் இப்போராட்டம் தொடர்ந்து வருகிறோம். மனித உரிமைகளுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக எதிரி என்ற வகையில் பார்ப்பனீய  சாதி ஆதிக்கத்தை  வேரறுப்பது வரை எங்கள் மனித உரிமைப் போர் தொடரும்.....................



      ARCHAGAR TRAINED STUDENTS SOCIETY-TAMILNADU
REGD. No. 189/09
128, Gokulam Illam, Arasamara street
Tiruvannamalai.
cell: 9047400485
http://appsa-tn.blogspot.com

Friday, March 4, 2011

அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் போராட்டம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவுபடி தமிழகத்தில் 6 இடங்களில் தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு அர்ச்சகருக்கான சான்றிதழ்களையும் வழங்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து மதுரை பாட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை கோரி மனு செய்துள்ளனர். இந்த மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம், மதுரை பாட்டர்கள் தரப்பு ஒத்திவைக்கக்கோரி மனு தந்து வருகிறது.

இதனால் இந்த வழக்கு மூன்று ஆண்டுகளாக விசாரணைக்கு வராமலேயே உள்ளது. இதனை கண்டித்து அர்ச்சர் பயிற்சி பெற்ற மாணவர்கள், மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அர்ச்சர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதனை மீண்டும் ஒத்திவைக்காமல்
விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் என மாநில தலைவவர் ரெங்கநாதன் தெரிவித்தார்.

இதையடுத்து முற்றுகை போராட்டம் நடத்திய 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

Thursday, February 10, 2011

பிரசாத லட்டு கூட ‘அவா’ தான் பிடிக்கணும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு !

பிரசாத லட்டு கூட ‘அவா’ தான் பிடிக்கணும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு !



பிரசாத லட்டு கூட ஆவா தான் பிடிக்கனும்
பார்ப்பன சாதியை சேராதவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும்; சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறி, திமுக அரசு 2006ஆம் ஆண்டில் தொடங்கிய அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்றரை ஆண்டுகாலம் பயிற்சி பெற்ற 207 மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க கூடாது என மதுரையைச் சேர்ந்த பார்ப்பன பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற இம்மாணவர்களை ‘அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்’ என சங்கமாக திரட்டியது மனித உரிமைப் பாதுகாப்பு மையம். உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று இச்சங்கத்தையும் ஒரு தரப்பினராக வழக்கில் இணைத்ததோடு பல்வேறு போராட்டங்களையும் நடத்தி உடனிருந்து வழிகாட்டி வருகிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
1970இல் பொரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971ல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைக் கொண்டு வந்தது திமுக அரசு. இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில்; ‘அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத் துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமையைக் கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்’ என்றும் கூறிய உச்சநீதிமன்றம், ‘அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உயர்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்படவேண்டும்’ என்றும் வலியுறுத்தியது. ‘இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும்’ என்று கூறி, சாதியையும், ஆலயத்தீண்டாமையையும் அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். 1972இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத் தடை விதித்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அடிப்படை மத உரிமை கூட இல்லாத பார்ப்பன இந்து மதத்தில் உள்ள தீண்டாமைக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் பார்ப்பனமயமான மற்றொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
பிரசாத லட்டு கூட ஆவா தான் பிடிக்கனும்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில், தட்டச்சர் ஜவான், பலவேலை, திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி, ஓடல் தீபம், ஓதுவார், மணியடி (தட்டு கும்பம்), யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பை 05.01.2011 அன்று வெளியிட்டது இந்து அறநிலையத்துறை. அந்த அறிவிப்பு விளம்பரத்தில் திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்கள் சிலையை திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும். பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால் ‘புனிதம்’ கெட்டுவிடும் என்று மற்ற சாதியினரை இழிவுபடுத்தும் பார்ப்பன சாதிவெறியை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் அந்த அறிவிப்பை வெளியிட்டது வேறுயாருமில்லை, இந்து அறநிலையத்துறைதான். ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்று அர்ச்சகர்களாக முடியாமல் தவித்துக்கொண்டிருந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள் இந்த ‘லட்டு’ செய்யும் பணியிலாவது சேரலாம் என்றெண்ணி அப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர்.
பிரசாத லட்டு கூட ஆவா தான் பிடிக்கனும்
பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்
இதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. அரங்கநாதன், உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்கு பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையை தூண்டுவதாகவும், ஆலயத்தீண்டாமையைக் கடைபிடிப்பதாகவும் அரசியலமைப்பு சட்டம் ஷரத்துக்கள் 14, 16 மற்றும் 17 ஆகியவற்றிற்கு எதிராகவும் இருப்பதால் அந்த பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவித்த அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுத்துக்கட்டளை மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு 07.02.11 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. உறுத்துக்கட்டளை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இடைக்கால தடைவிதிக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு ‘இத்தகைய’ பழக்கவழக்கங்களை அரசியலைப்பு சட்டம் ஷரத்து 13 அங்கிகரிப்பதாகவும் தெரிவித்தார். அரங்கநாதனுக்காக வழக்காடிய வழக்குரைஞர் சகாதேவன் சாதி வேற்றுமை மற்றும் தீண்டாமை காரணமாக பணிவழங்க மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவ வேலை வாய்ப்பிற்கான உரிமைக்கு எதிரானது என வாதிட்டதை ஏற்காமல் மத உரிமையில் சமத்துவம் (வெங்காயம்!) எல்லாம் கிடையாது என்பதை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 கூறியிருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் தற்போது செய்யவியலாது என தடையானை மனுவை தள்ளுபடி செய்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு மயிலிறகால் வருடிவிட்டிருக்கிறார் நீதிபதி சுகுணா. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது என்பது வேறுவழக்கென்றும், அது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. ஆனால், இந்தப் பணி கோயில் பணிவிடைகளுக்கான வேலை என்று வாதாடியதையும் நிராகாரிதுள்ளார் நீதிபதி.
பார்ப்பனரல்லாதோர், கோயிலில்; மணியாட்டினால் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பார்ப்பனரல்லாதோர் பிரசாதம் செய்தால், தண்ணீரெடுத்து சிலையை குளிப்பாட்டினால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது.
இத்தனை நடக்கும்போதும் சாதியா? அது பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது குழந்தைகளிடம் கேட்பதனால்தான் உருவானது என்பதுபோல் பார்ப்பன புரட்டையும் வெட்கமில்லாமல் பேசித்திரிகின்றனர் பார்ப்பன மற்றும் ‘கருப்பு’ அம்பிகள்.
இத்தகைய பார்ப்பன மயமான தீர்ப்பை வழங்கும் நீதிபதி நேர்மையானவராக, பார்ப்பனர் அல்லாதவராக இருந்தால் சரியான தீர்ப்பை வழங்கிவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையை இந்த தீர்ப்பு சாட்டையால் அடிக்கிறது. ‘காசு வாங்கிக்கொண்டு தீர்ப்பை எழுதினார்’  என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகாதவர் நீதிபதி சுகுணா! ஆனால், பிரச்சனை நீதித்துறை காவி மயமாக இருப்பது, நீதிபதி பார்ப்பன ஆதரவாளராக இருப்பது. அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்துக்கள் 13, 15 மற்றும் 26 ஆகியவை இந்து மதத்தின் தீண்டாமை, பிற்போக்குதனம், சாதி ஒழிப்பு என்பதை ஊறுகாய் போல தொட்டுவிட்டு, மதம் என்பது என்ன? சாதி என்பது என்ன? இந்து மதத்தின் சாதி தொடர்வது ஏன்? மதச்சார்பின்மை என்பது என்ன? என்பதையெல்லாம் விளக்காமல் சாதுர்யமாக பழைய கழிவுகளை கரண்டியில் அள்ளிப் பானையில் போட்டு பொங்கல் வைத்து சமத்துவம் பேசுகிறது ‘அரசியலமைப்புச் சட்டம்’. நீதித்துறை அதற்கு மகுடம் சூட்டுகிறது.
அதன் லட்சணம்தான் இன்று பல்லிளிக்கிறது. இந்துமத பழக்கவழக்கத்தின்படி, லட்டு, புந்தி கூட ‘அவா…’ செஞ்சாத்தான் லோகம் ஷேமமா இருக்கும்னு உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடிகிறது.


வா. அரங்கநாதன்
மாநிலத்தலைவர் & செய்தியாளர்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 90474 00485
Email: ranganathantvm@gmail.com
http://appsa-tn.blogspot.com