Tuesday, November 19, 2019

பெண்ணை தீட்ச்சதர் தாக்கியதற்கு கண்டனம்!

பெண் பக்தையை தாக்கிய 
தீட்சிதனின் பார்ப்பனக் கொழுப்பு !


ரு ஐம்பது வயதுமிக்க பெண்மணி ஒருவர் ஒரு தீட்சிதனுடன் வாக்குவாதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது. அந்த தீட்சிதன் தன்னை அடித்ததையும், தான் அவனது தங்கச் சங்கிலியைப் பறிக்கப் போனதாக்தான் அடித்ததாக அவன் பொய் சொல்வதையும் சக பக்தர்களிடம் உடைந்து போய் விவரிக்கிறார் அந்தப் பெண்மணி. அங்கு சூழ்ந்துள்ள பக்தர்கள் அந்த தீட்சிதனை சூழ்ந்து கேள்வி கேட்கிறார்கள். ஆனால் எவ்விதப் பதட்டமும் இல்லாமல் திமிராக அமர்ந்து தனது கதையையே திரும்பத் திரும்பச் சொல்கிறான் அந்த தீட்சிதன்.
தனது மகனின் பிறந்த நாளில் அவரது பெயருக்கு அர்ச்சனை செய்ய சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றிருக்கிறார், சிதம்பரம் வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்த 51 வயதான பெண்மணி லதா. தனது மகனின் பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றைச் சொல்லி அர்ச்சனை செய்யுமாறு அங்கிருந்த தீட்சதர் தர்ஷனிடம் கூடையை கொடுத்திருக்கிறார். கூடையை எடுத்துச் சென்று அதிலிருந்த தேங்காயை உடைத்து கொண்டு போன சீக்கிரத்தில் திரும்பி வந்து கொடுத்திருக்கிறார் தீட்சிதர் தர்ஷன்.
“அர்ச்சனை பண்ண சொன்னா, பேரு, நட்சத்திரம் எதுவும் சொல்லாம தேங்காய மட்டும் உடச்சி கொண்டுவந்து தர்றீங்க” என்று கேட்டிருக்கிறார் லதா. அதற்கு “அப்படி பண்ணனும்னா நீங்களே பண்ணிக்கோங்க” என்று திமிராக பேசியிருக்கிறான் அந்த தீட்சிதர். தீட்சதனின் பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் “ அப்புறம் எதுக்கு நீங்க இருக்கீங்க? ” என்று கேட்க, பார்ப்பனக் கொழுப்பெடுத்த அந்த தீட்சதன் தர்ஷன் ஒரே அடியாக அந்த பெண்மனியின் கன்னத்தில் அறைந்திருக்கிறான். அந்த பெண்மனியோ சுருண்டு கீழே விழுந்திருக்கிறார்.
அருகில் இருந்த பக்தர்கள் இச்சம்பவத்தைக் கண்டு உடனடியாக நெருங்கி தீட்சத ரவுடி தர்ஷனை கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதற்கு அந்த தீட்சிதன் “என் செயினை அறுக்க வந்தாங்க.. அதனால தான் அடிச்சேன்” என்று கொஞ்சமும் நா கூசாமல் அபாண்டமான பொய்ப் பழியை அந்த பெண்ணின் மீது சுமத்தினான். ஆனால் உண்மையை அருகில் இருந்த வேறொரு பக்தர் போட்டுடைக்க, தீட்சிதன் பொய் சொன்னது உறுதியாகத் தெரிந்ததும், வாக்குவாதம் அதிகமானது.
இதையடுத்து லதா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சம்பவத்தையும் அது சமூக வலைத்தளங்களில் பரவுவதையும் அறிந்த சிதம்பரம் நகர போலீசு ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீஸார் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்திவிட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று லதாவிடம் விசாரணை செய்திருக்கிறார்கள். அந்த விசாரணையில் கோயிலில் நடந்தது குறித்து லதா புகார் அளிக்க, தீட்சித ரவுடி தர்ஷன் மீது பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியது, மிரட்டல் விடுத்தது, பெண்கள் மீதான வன்கொடுமை ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் போலீசு தீட்சிதன் தர்ஷனைக் கைது செய்யவில்லை. தீட்சிதன் அன்று வீடு திரும்பவில்லை என்றும், தலைமறைவாக உள்ளதாகவும் அவனைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வகையான “நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையெல்லாம்”, எஸ்.வி.சேகர் எனும் பொறுக்கியைக் கைது செய்யாமல் அவனை தேடிக் கொண்டிருப்பதாகக் கூறி, அவனுக்குப் பாதுகாப்புக் கொடுத்து அவன் கூடவே போலீசு சுற்றிம்போதே நாம் கேட்டுள்ளோம்.
அதற்கு முன்னால், எச்ச ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தை, “ஹைகோர்ட்டாவது ம#$ராவது” என்று பேசிய பின்னரும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் கோர்ட் கைவிட்டது. இரண்டு பார்ப்பன நரிகளுக்கும் சலுகை வழங்கிய போலீசும் நீதிமன்றமும், சிதம்பரம் கோவிலின் கொழுப்பேறிய திருட்டு தீட்சிதனுக்கு மட்டும் தண்டனை பெற்றுத் தந்துவிடுமா என்ன ?
உட்கார்ந்த இடத்திலேயே நோகாமல் மந்திரம் சொல்லி தின்று கொழுத்த கூட்டத்திற்கு இன்று மந்திரம் சொல்வதற்குக் கூட கஷ்ட்டமாக இருக்கிறது. கோவிலுக்குள் தமிழ் மொழியில் தேவாரம் பாடக் கூடாது என்று கொக்கரித்த போதே இந்தக் கும்பலை கோவிலை விட்டு அடித்து வெளியேற்றியிருந்தால், இன்று இந்நிலை ஏற்பட்டிருக்குமா ?



Chidambaram Natarajar Kovil Issue / பெண்ணை தீட்ச்சதர் தாக்கியதற்கு கண்டனம்!

சிதம்பரம் நடராசர் கோவிலில் தரிசனம் செய்ய சென்ற பெண்ணை தீட்ச்சதர் தாக்கியதற்கு கண்டனம்!
அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் ஆகலாம் என்ற சட்டத்தில் 2 ஆண்டு காலம் பயிற்சி முடித்து பார்ப்பன சூழ்ச்சியால் பணி செய்ய முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அர்ச்சர்கர் மாணவர் சங்க தலைவர் அரங்கநாதன் தனது கண்டனத்தை பதிவு செய்கிறார்.

Friday, October 25, 2019

உண்ணாவிரத போராட்டம்


பெரியார் சிலை முன்பு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்



https://timesoftamilnadu.com/2019/09/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D/

பெரியார் சிலை முன்பு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

பெரியார் சிலை முன்பு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்