Friday, March 4, 2011

அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் போராட்டம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவுபடி தமிழகத்தில் 6 இடங்களில் தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு அர்ச்சகருக்கான சான்றிதழ்களையும் வழங்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து மதுரை பாட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை கோரி மனு செய்துள்ளனர். இந்த மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம், மதுரை பாட்டர்கள் தரப்பு ஒத்திவைக்கக்கோரி மனு தந்து வருகிறது.

இதனால் இந்த வழக்கு மூன்று ஆண்டுகளாக விசாரணைக்கு வராமலேயே உள்ளது. இதனை கண்டித்து அர்ச்சர் பயிற்சி பெற்ற மாணவர்கள், மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அர்ச்சர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதனை மீண்டும் ஒத்திவைக்காமல்
விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் என மாநில தலைவவர் ரெங்கநாதன் தெரிவித்தார்.

இதையடுத்து முற்றுகை போராட்டம் நடத்திய 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment