Monday, December 13, 2010

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 
IMG_4836.JPGஅனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்துக்கு எதிரான தடையாணையை நீக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்கத்தினர் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.
IMG_4888.JPGஅனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவதற்காக சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.  இதில் 206 பேர் சேர்ந்து பயிற்சியும் பெற்றனர். ஆனால் மதுரையைச் சேர்ந்த அர்ச்சகர்கள் இச்சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர்.இதனால்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசால் வேலைவாய்ப்பு தர முடியவில்லை. எனவே,
100_1818.JPGஇப்பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு உச்சநீதிமன்றத்தில் இச்சட்டத்துக்கு எதிராக உள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் வ.அரங்கநாதன் தலைமை தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
http://www.dinamani.com/edition/print.aspx?artid=209841

No comments:

Post a Comment